17 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 43 வயதான பெண் கைது!

rape

அமெரிக்காவில் மதுபோதையிலிருந்த 43 வயது பெண், 17 வயது சிறுவனை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளோரிடாவை சேர்ந்தவர் ஜெசிகா குட் என்ற பெண், கடந்த 9ஆம் தேதி தனது தோழி வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு ஜெசிகா அதிகளவில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.

அதனால் அதிக போதையான ஜெசிகா, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த 17 வயது சிறுவனிடம் மோசமாக நடந்துள்ளார்.

அந்த சிறுவனை வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்த 12 வயது சிறுமியின் முன் இந்த கொடூர செயலை ஜெசிகா சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் விசாரித்து வந்த புளோரிட நகர காவல்துறையினர் ஜெசிகாவை கைது செய்து சார்லோட் சிறையில் அடைத்துள்ளனர்.

போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல், இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்ட பெண்ணின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட அந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த, அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

புளோரிடாவில், 18 வயது, மற்றும் 18 வயதிற்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது சட்டரீதியான குற்றமாக கருதப்படுகிறது