ஹெச்1பி விசா தொடர்பான கட்டுப்பாடுகள் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!

visa

ஹெச்1பி விசா தொடர்பான கட்டுப்படுகளை மார்ச் மாதம் வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை 2020 ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, ஹெச் 1 பி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கான பணி வீசாக்கள் வழங்குவது, குடிபெயர்வுக்கான கிரீன் கார்டு விண்ணப்பங்களுக்கான தடை உத்தரவு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, அதனை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுபேற்கவுள்ள ஜோ பைடன், ட்ரம்ப் நிர்வாகத்தின் தடையுத்தரவை விமர்சித்திருந்தார். ஆனால் அவர் இந்த தடை உத்தரவை நீக்குவாரா என தெரியவில்லை.

பணி விசாக்களுக்கான தடை நீட்டிப்பால் பல இந்திய குடும்பங்கள் தத்தளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் நெருக்கடி வேற, இந்த ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்ல முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது.

அதன்பிறகு சென்றால் வேலை இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் அமெரிக்காவில் வேலை செய்யும் ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் தோன்றுகிறது.

இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வேலை, நிதி பிரச்னை, சுகாதார அச்சுறுத்தல் இப்படி பல பிரச்னைகளால் சிக்கித்தவித்துவருகின்றன.

இதனிடையே அமெரிக்காவில் சுமார் 6 லட்சம் பேர் ஹெச் 1பி விசா மூலம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவும், கனடாவைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஹெச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வோரின் பணிக்காலம் மூன்றாண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெச்1 பி விசா பெற்று பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊதியமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:ஒரே நாளில் 3,927 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter