அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

vaccine

அமெரிக்காவில் இதுவரை 23 கோடி முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

US surpasses 100 million COVID vaccinations | Coronavirus pandemic News | Al Jazeera

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது.

இதற்கு முக்கிய காரணம் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.

இதனால் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் 16 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 10கோடி பேர் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்று காலை (28.4.21)நிலவரப்படி, மொத்தம் 23 கோடி முறை கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

ஜூன் மாதத்திற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.