அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை போட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு ஊசி போடப்பட உள்ள நிலையில் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடெனா ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் அவரின் மனைவி கேரனும்கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இதேபோல் புதிய துணை அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் கமலா ஹாரிஸும் கடந்த வாரம் மாடெனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டது. ஜோ பைடனுக்கு கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது டெலவர் மாகாணத்தில் உள்ள நீவார்க்(newark) மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டது.
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தனது முக்கிய பணி என பைடன் தெரிவித்துள்ளார்.
தான் பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: “ட்ரம்ப் பதவிக்காலம் ஓவர்”அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவு
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…