அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரிகான் மாகாணத்தின் சேலம் நகரத்தில் உள்ள வீடு ஒன்றி மர்மநபர் ஒருவர் பலரை பணய கைதிகளாக வைத்திருப்பதாக அம்மாகாண காவல்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் வீட்டை சுற்றிவளைத்து. பயிற்சி பெற்ற பேச்சாளர் ஒருவரை வைத்து அந்த மர்ம நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக வீட்டினுள் ஒரு நபரை போலீசார் உடன் அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதில் போலீசாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை மூலம் வழிக்கு கொண்டுவரலாம் என நினைத்த போலீசாரின் முடிவு, தோல்வியில் முடிந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தி மர்மநபரை பிடிக்க முயற்சித்தனர். தொடர்ந்து அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் கொல்லப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வீட்டிலிருந்தவர்களை அந்த நபர் சுட்டுக்கொன்றது தொடர்பாக ஒரிகான் மாநில காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், பெரும் இரைச்சல் கேட்டதாகவும் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். என் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவருடன் சேர்த்து, மொத்தம் 3 பேர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சம்பவத்தை பார்த்த மற்றொரு நபர் தெரிவித்துள்ளார். அந்த மர்ம நபர் எதற்காக பலரை பிணைக்கைதியாக பிடித்துவைத்தார், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: 10 ஆண்டுகளாக வருமானவரி கட்டாத அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…