அமெரிக்க அதிபர் தேர்தல்: இரண்டாவது விவாதம் ரத்து

debate

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளர் பிடன் இடையிலான இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேர் விவாதம் நடத்துவர்.

அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம். அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.

kamala harris
Image: TimesofIndia

விவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும், கொரோனாவில் இருந்து பாதிப்பில் இருந்து ட்ரம்ப் முழுமையாக நீங்கினால் மட்டுமே அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கப் போவதாக பிடன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மியாமியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 22 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான இரண்டாவது விவாதம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தாம் பங்கேற்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஜோ பைடனை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையும் படிக்கலாமே: சிங்கப்பூர் கொரோனா நோயாளிகளின் ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட அதிபர் டிரம்ப்பின் மருந்து!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter