வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை!

அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் விமான சேவைக்கு கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்கா, இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா இயக்கும் விமான சேவைக்கு அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம், நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமானசேவையை துவக்குவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தடைஉத்தரவு, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்பதால் அங்கு தவித்து வரும் இந்தியர்களை மூன்றாம் மற்றும் நான்காம் கட்டமாக தாய்நாட்டிற்கு அழைத்துவரும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இக்கட்டான சூழலிலும் ஏர் இந்தியா இலவச சேவையையே வழங்கியிருக்க வேண்டும், பயணிகளிடமிருந்தே கட்டணம் வசூலிப்பது விமான பயண நெறிமுறைகளுக்கு எதிரானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த தடை உத்தரவு குறித்து மே மாதமே இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் இந்த விவகாரத்தில் உடனடி முடிவெடுக்க இந்திய அரசு விரும்பவில்லை என்பது புலப்படுவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

ஏர் இந்தியா அமெரிக்காவிற்கான விமான சேவையை தொடங்கும்போது விமானத்துறை அமைச்சகத்திடம் உரிய அனுமதி பெற்றால் மட்டுமே விமானத்தை இயக்குவது சாத்தியம் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம், வெளிநாடுகளில் தவித்துவந்த இந்தியர்களை மீட்டதில் சில விமான நிறுவனங்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.